தெலங்கானாவின் நிஜாமாபாத் மாவட்டத்தில் உருது வகுப்புகள் நடத்தப்படும் விதம் குறித்த சர்ச்சை பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆர்மூர் மண்டலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், இந்தி வகுப்புகளின் போது உருது கற்பிக்கப்படுவதாகக் குற்றம் சாட்டி, உள்ளூர் பாஜக தலைவர் அம்பேத்கர் பாலு தனது ஆதரவாளர்களுடன் பள்ளிக்குள் நுழைந்து நிர்வாகத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதம் மோதலுக்கு வழிவகுத்ததாகவும், இதில் தலைமை ஆசிரியர் தாக்கப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, பாஜக தலைவருடன் பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மறுபுறம், சமூகக் குழப்பத்தைத் தூண்டியதாகக் குற்றம் சாட்டி பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் மீது மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

பள்ளிகளில் உருது வகுப்புகள் குறித்து சர்ச்சை.. தெலங்கானாவில் பாஜக தலைவர் கைது.
தெலங்கானாவின் நிஜாமாபாத் மாவட்டத்தில் உருது வகுப்புகள் நடத்தப்படும் விதம் குறித்த சர்ச்சை பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆர்மூர் மண்டலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், இந்தி வகுப்புகளின் போது உருது கற்பிக்கப்படுவதாகக் குற்றம் சாட்டி, உள்ளூர் பாஜக தலைவர் அம்பேத்கர் பாலு தனது ஆதரவாளர்களுடன் பள்ளிக்குள் நுழைந்து நிர்வாகத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதம் மோதலுக்கு வழிவகுத்ததாகவும், இதில் தலைமை ஆசிரியர் தாக்கப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, பாஜக தலைவருடன் பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மறுபுறம், சமூகக் குழப்பத்தைத் தூண்டியதாகக் குற்றம் சாட்டி பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் மீது மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

