அஸ்ஸாமில் பிரம்மபுத்திரா ஆற்றின் மீது சமீபத்தில் திறக்கப்பட்ட பாலத்தில் பிறந்தநாள் விழா நடத்தியதற்காக 13 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பாலத்தில் வாகனங்களை நிறுத்தி கேக் வெட்டியதாலும், புகைப்படம் எடுத்ததாலும் அவர்கள் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பொதுப் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் செயல்பட்டதற்காக அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தச் சம்பவத்தின் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்தனர். இதுபோன்ற செயல்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்காக, புதிதாகத் திறக்கப்பட்ட பாலத்தில் கடுமையான கண்காணிப்பு அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

பிரம்மபுத்திரா பாலத்தில் பிறந்தநாள் கொண்டாட்டம்.. 13 பேர் கைது
அஸ்ஸாமில் பிரம்மபுத்திரா ஆற்றின் மீது சமீபத்தில் திறக்கப்பட்ட பாலத்தில் பிறந்தநாள் விழா நடத்தியதற்காக 13 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பாலத்தில் வாகனங்களை நிறுத்தி கேக் வெட்டியதாலும், புகைப்படம் எடுத்ததாலும் அவர்கள் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பொதுப் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் செயல்பட்டதற்காக அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தச் சம்பவத்தின் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்தனர். இதுபோன்ற செயல்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்காக, புதிதாகத் திறக்கப்பட்ட பாலத்தில் கடுமையான கண்காணிப்பு அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

