தென்மேற்குப் பருவமழை மெதுவாகத் தொடங்கியதால், நாடு கடுமையான வறட்சியை எதிர்கொண்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வுத் துறையின் சமீபத்திய தரவுகளின்படி, நாடு முழுவதும் மழைப்பொழிவில் 35 சதவிகிதப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மத்திய இந்தியாவில் 61 சதவிகிதப் பற்றாக்குறையும், வடகிழக்கு மாநிலங்களில் 43 சதவிகிதப் பற்றாக்குறையும் பதிவாகியுள்ளது. வழக்கமாக மும்பைப் பகுதியை வந்தடையும் என எதிர்பார்க்கப்படும் பருவமழை, இன்னும் தொடங்காததால் விவசாயத் துறை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. மத்திய அரசு சுமார் 200 மாவட்டங்களைச் சிறப்பு கண்காணிப்பில் வைத்து, மாற்றுப் பயிர்கள் குறித்து விவசாயிகளுக்கு அறிவுறுத்தி வருகிறது. இந்த ஆண்டு ‘சூப்பர் எல் நினோ’ விளைவு ஏற்படக்கூடும் என சர்வதேச வானிலை ஆய்வு நிறுவனங்கள் எச்சரித்துள்ளதால், அரசு நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.

நாடு முழுவதும் 35 சதவீத மழைப்பொழிவு பற்றாக்குறை.. தென்மேற்குப் பருவமழை தாமதம்.
தென்மேற்குப் பருவமழை மெதுவாகத் தொடங்கியதால், நாடு கடுமையான வறட்சியை எதிர்கொண்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வுத் துறையின் சமீபத்திய தரவுகளின்படி, நாடு முழுவதும் மழைப்பொழிவில் 35 சதவிகிதப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மத்திய இந்தியாவில் 61 சதவிகிதப் பற்றாக்குறையும், வடகிழக்கு மாநிலங்களில் 43 சதவிகிதப் பற்றாக்குறையும் பதிவாகியுள்ளது. வழக்கமாக மும்பைப் பகுதியை வந்தடையும் என எதிர்பார்க்கப்படும் பருவமழை, இன்னும் தொடங்காததால் விவசாயத் துறை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. மத்திய அரசு சுமார் 200 மாவட்டங்களைச் சிறப்பு கண்காணிப்பில் வைத்து, மாற்றுப் பயிர்கள் குறித்து விவசாயிகளுக்கு அறிவுறுத்தி வருகிறது. இந்த ஆண்டு ‘சூப்பர் எல் நினோ’ விளைவு ஏற்படக்கூடும் என சர்வதேச வானிலை ஆய்வு நிறுவனங்கள் எச்சரித்துள்ளதால், அரசு நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.

